Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, January 1, 2010

எப்ப வரும் அந்த புத்தாண்டு ?



உன் நரைமுடி கண்டு
நாங்க சிரிக்கணும்
என் வழுக்கையை மற்றவர்கள்
கிண்டலடிக்கணும்

கல்லூரி சேட்டைகளை
சொல்லிச் சொல்லி
சிரிப்பு வெடி நாம வெடிக்கணும்

அனுபவங்கள் செதுக்கி விட்ட
மாற்றங்களை நினைச்சு
பார்த்து ரசிச்சுத் திளைக்கணும்

'உன் ஆளு இப்ப
எங்க இருக்கோ'ன்னு கேட்டு
மலரும் நினைவுல மூழ்கடிக்கணும்

பிரியும் போது நிச்சயமா
அழுகாம சிரிச்சி நின்னு
போட்டோ ஒன்னு எடுத்து வைக்கணும்

அப்படி ஒரு புத்தாண்டுக்குத் தான்
காத்திருக்கேன்
அதுக்குத்தான் ஆண்டவன வேண்டியிருக்கேன்....

அனைவருக்கும் சுடுதண்ணியின் இதங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் :)